மானாமதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோர் நீர் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.
காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவடடங்களிலிருந்த வந்திருந்த மக்கள் வைகை ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் இவர்கள் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சௌந்திரநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர்.
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய வந்திருந்தவர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்ததால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மானாமதுரை அருகே உள்ள இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விசுவநாதர் கோயிலில் ஏராளமானோர் தங்களது குடும்பத்தில் மறைந்து போன முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.
பின்னர் இவர்கள் இங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் மூலவருக்கு கங்கை தீர்த்தமிட்டு தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தர்ப்பண பூஜைக்கான பொருள்கள் கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் எஸ். பி. தேவர் செய்திருந்தார்.மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயிலில் ஏராளமானோ தர்ப்பண பூஜை செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.
மேலும் மானாமதுரை, திருப்புனம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடி அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களுக்குச்க்கு சென்று தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



