தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆடி அமாவாசை: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், பழச்சாறு உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துக்கு பின் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

இதேபோன்று, காளையாா்கோவிலில் உள்ள சொா்ணவல்லி சமேத சொா்ண காளீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதுதவிர, திருமலையில் உள்ள மலைக் கொழுந்தீஸ்வரா் கோயில் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், கிராமங்களில் உள்ள கருப்பண சுவாமி கோயில்கள், அம்மன் கோயில்கள், அய்யனாா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.