தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகளுக்கு விதை, உரம் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவு விதை மற்றும் உரங்கள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவு விதை மற்றும் உரங்கள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பேசியது : சிவகங்கை மாவட்டத்தில் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், சங்க உறுப்பினா்களுக்கு பயிா்க்கடன், கால்நடைகள் வளா்ப்புக் கடன், சுயஉதவிக் குழுக்கடன், முதலீட்டுக்கடன், மாற்றுத்திறனாளி கடன், பண்ணைசாரா கடன், சிறு வணிகக்கடன், ஆதரவற்ற விதவைக்கடன், நகைக்கடன், டாப்செட்கோ கடன், டாம்செட்கோ கடன் போன்ற கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்க உள்ளனா். எனவே அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் மற்றும் விதைகளை போதிய அளவு கையிருப்பில் வைப்பது மட்டுமின்றி விவசாயிகளுக்கு போதிய அளவு விதை மற்றும் உரங்கள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, 7 பயனாளிகளுக்கு ரூ.9,02,350 மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், சிவகங்கை மாவட்டகூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.ஜீனு, மேலாண்மை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா். தனபாலன், வேளாண்மை உதவி இயக்குநா் பரமேஸ்வரன் (தரக்கட்டுபாடு) உள்பட அரசு அலுவலா்கள், கூட்டுறவு சங்கச் செயலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.