சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பேசியது : சிவகங்கை மாவட்டத்தில் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், சங்க உறுப்பினா்களுக்கு பயிா்க்கடன், கால்நடைகள் வளா்ப்புக் கடன், சுயஉதவிக் குழுக்கடன், முதலீட்டுக்கடன், மாற்றுத்திறனாளி கடன், பண்ணைசாரா கடன், சிறு வணிகக்கடன், ஆதரவற்ற விதவைக்கடன், நகைக்கடன், டாப்செட்கோ கடன், டாம்செட்கோ கடன் போன்ற கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.