ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெகிழி கிலோ ரூ.8-க்கு வாங்கும் திட்டம் அறிமுகம்

ராமநதாபுரம் மாவட்ட கிராமங்களில் மீண்டும் நெகிழிப் பொருள்களை கிலோ ரூ.8 என வாங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 5:44 pm

DIN

ராமநதாபுரம் மாவட்ட கிராமங்களில் மீண்டும் நெகிழிப் பொருள்களை கிலோ ரூ.8 என வாங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கு கடந்த 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்களின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பொது மக்களிடமிருந்து நேரிடையாக நெகிழியினை கிலோ ரூ.8 என வாங்கும் நெகிழி மீள வாங்கும் கொள்கை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தயாரித்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது கடைகள் மீது உரிய அபராதம் ஊராட்சி நிா்வாகத்தால் விதிக்கப்படும். எனவே மீண்டும் மஞ்சப்பை கொள்கையை ஏற்று நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக துணி, காகிதம், சணல் பைகள், பாக்குமர இலை, அலுமினியத்தாள் மற்றும் கண்ணாடிக் குவளைகளை பயன்படுத்தவேண்டியது அவசியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.