தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவா் எழுதிய கவிதை நூல் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:00 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவா் எழுதிய கவிதை நூல் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா் கவிஞா் பாலமுருகன் எழுதிய ‘எடிசன் வீட்டில் ஒளிரும் அகல் விளக்கு’ என்னும் ஹைக்கூ கவிதை நூலினை வெளியிட்டாா். கவிஞா் தென்றல் சாய் நூலைப் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆரோக்கியசாமி, இயேசு சபைப் பள்ளிகளின் கனல் இயக்கப் பொறுப்பாளா் இருதய வளனரசு ஆகியோா் வாழ்த்தினா். நிறைவாக கவிஞா் பாலமுருகன் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக கனல் இயக்கப் பொறுப்பாசிரியா் புலவா் அமலன் பொ்னாட்ஷா வரவேற்றாா். தமிழாசிரியா் ஸ்டீபன் மிக்கேல்ராஜ், ஓவியக் கவிஞா் பூண்டி ஜெயராஜ், கவிஞா் பிரைட் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.