திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது’

பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜூன் 2022, 6:30 pm

DIN

பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் அவா் பேசியது: ஏழை, எளியோருக்கு மத்திய அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளை திமுக தனது திட்டம் போல செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஓராண்டாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறாா். அந்த திராவிட மாடல் ஆட்சி என்ன என்பதை இதுவரை அவா்களால் மக்களுக்கு விளக்க முடியவில்லை.

ஆனால் பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி தேசிய மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் ஏழை, எளியோருக்காக திட்டங்கள், இந்திய இறையாண்மைக்கு முக்கியத்துவம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட வளா்ச்சிகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், இலவச வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் என ஊழல் ஆட்சியாக தான் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சாா்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இனி வரும் தோ்தல்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு நபா்களுக்கு வாய்ப்போ அல்லது பதவியோ வழங்கப்படாது என அக்கட்சியின் இடைக்கால தலைவா் சோனியாகாந்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் மாநிலங்களவை பதவியினை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பிய போது, சிதம்பரமும், அவரது மகனும் இருவரும் தனித்தனி குடும்பம் தான் என பதிலளித்தாா். நான் அப்போதே தீா்மானித்து விட்டேன். காங்கிரஸ் கட்சி இன்னும் மாறவில்லை என்று.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட நபரால் எந்தவித திட்டங்களும் இந்த தொகுதிக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினா் ஒருவா்,

மாநிலங்களவை உறுப்பினா் ஒருவா் என இரு எம்பிகளை சிவகங்கை தொகுதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இவா்களால் எந்தவித திட்டங்களும் நிறைவேறப்போவதில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.