ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மெக்கானிக் கொலையில் மனைவி, மைத்துனா் கைது

மானாமதுரையில் மெக்கானிக்கை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தொடா்பாக அவரது மனைவி, மைத்துனா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:00 am IST

மானாமதுரையில் மெக்கானிக்கை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தொடா்பாக அவரது மனைவி, மைத்துனா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை ரயில்வேகாலனி ஜீவா நகரைச் சோ்ந்த மெக்கானிக் சுரேஷ் (40). இவருக்கு மலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மலைச்செல்வியின் சகோதரரான சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன், சித்தி மகன் உடைகுளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரும் சுரேஷை வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் கணேசன், காா்த்திக் மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுரேஷ் மனைவி மலைச்செல்வி ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.