கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் ந

News image

செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோயில் மாசி உற்சவ விழாவில் பக்தர்கள் அரிவாளில் ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினர்

Updated On :12 மார்ச் 2022, 5:35 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பக்தர்கள் கரகம் சுமந்து சாமியாடி வந்து அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறினர்.

இக்கோயிலில் மாசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் குடிமக்கள் கோயிலில் இருந்து மாலையில் பூஜைப் பெட்டிகளுடன்  அருகே உள்ள வைகை ஆற்றுக்கு புறப்பட்டனர்.

இரவு வைகை ஆற்றிலிருந்து கரகம் சுமந்து சாமி ஆடியபடி பக்தர்கள் மேளதாளம், வானவேடிக்கையுடன் கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர். கோயிலிலுக்கு அருகே சாமியாடிகள் அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.  

மாசி உற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்

மாசி உற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்

அதைத்தொடர்ந்து  காமாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று உள்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அதன்பின் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் சனிக்கிழமை காலை கோயில் பெண்ணடி மக்கள் காமாட்சி அம்மனுக்கு பால் குடங்கள் எடுத்து செய்களத்தூர் கிராமத்தை வலம் வந்து கோயிலுக்கு வந்தடைந்தனர்.

அதன்பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் கே.நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பி. ஏ.நாகராஜன், எஸ்.பி.எம். அன்புக்குமார், அ.கி.சு. யாழ் முருகன், கி.செ. முத்துப்பாண்டியன், இரா.திருஞானம், கா.மகா.சரவணன், ம.இராஜா, பி.பழனியப்பன் மற்றும் கோயில் பங்காளிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.