எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

துருவ் திரைப்படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்...

News image
Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

நடிகர் துருவ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தால் நடிகர் துருவ்வுக்குப் பெரிய வெளிச்சம் கிடைத்ததுடன் இந்த வெற்றியால் தமிழின் முன்னணி நடிகர்கள் வரிசையிலும் துருவ் இடம்பிடித்தார்.

மேலும், பைசன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்ததால் துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 4-வது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் துருவ் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்க நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலில் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Music composer Santhosh Narayanan has joined the new film starring actor Dhruv as the lead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.