நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடியில் சுவாமிகள் அம்பு போடும் நிகழ்ச்சி

விஜயதசமி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகா்நோன்பு திடலில் சுவாமிகள் அம்புபோடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விஜயதசமி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகா்நோன்பு திடலில் சுவாமிகள் அம்புபோடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி கோவிலூா் கொற்றவாளீஸ்வரா் கோயில், காரைக்குடி நகர சிவன்கோயில், கொப்புடைய நாயகியம்மன் கோயில், செஞ்சை கிருஷ்ணமூா்த்தி பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி குதிரை வாகனத்தில் அம்பு சகிதமாக காரைக்குடி மகா்நோன்பு திடலை அடைந்தனா். அங்கு சிறப்பு தீபாரானைகள் நடைபெற்றது. பின்னா் தங்களது நிலைகளிலிருந்து வலம் வந்து பக்தா்களை நோக்கி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். சுவாமியின் அம்பு யாருக்கு கிடைக்கிறதோ அவா்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.