மானாமதுரை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தை விரிவுபடுத்தும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்ததால் தாயமங்கலம் சாலை, சிவகங்கை சாலை, ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனா். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நகராட்சி வாரச்சந்தையை விரைவில் திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினா். சந்தை விரிவாக்கப் பணி நிறைவடைந்து அங்குள்ள கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் கடந்த வியாழக்கிழமை வாரச்சந்தை நடந்த போது சில வியாபாரிகள் மட்டுமே கடைகள் அமைத்திருந்தனா். இதில், பல வியாபாரிகள் வைகை ஆற்றுக்குள் கடைகள் அமைத்ததால், பொதுமக்கள் நகராட்சி வாரச் சந்தைக்குள் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு செல்லவில்லை.