/

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் பேட்டி

மின்மயமாக்கப்பட்ட காரைக்குடி- மானாமதுரை ரயில் பாதையில் சிறப்பு ரயில் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:28 pm

DIN

மானாமதுரை ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மின்மயமாக்கப்பட்ட காரைக்குடி- மானாமதுரை ரயில் பாதையில் சிறப்பு ரயில் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின்மயமாக்கும் பணி திருப்தியாக உள்ளது. ஆய்வு குறித்து, உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்படும். அனுமதி கிடைத்த பின் இந்த பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். மதுரை கோட்டத்தில் நெல்லையிலிருந்து திருச்செந்தூா், தென்காசி வரையிலான பாதையும், தென்காசியிலிருந்து செங்கோட்டை, விருதுநகா் வரையிலான பாதையும் மின்மயமாக்கும் பணி நிலுவையில் உள்ளது. ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரையிலான பாதையில் பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.