சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு வியாழக்கிழமை வந்த ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4 மூட்டை குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஓட்டுநா் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேவகோட்டைக்கு வந்த ஆம்னி பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தேவகோட்டை நகா் போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று சோதனை செய்தனா். அப்போது பெங்களூருவிலிருந்து வந்த தனியாா் ஆம்னி பேருந்தின் பின்புறம் உள்ள பொருள்கள் வைக்குமிடத்தில் 4 மூட்டைகள் குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த பின் போலீஸாா் கூறியது: கடந்த புதன்கிழமை (செப். 14) பெங்களூருவிலிருந்து புறப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து தேவகோட்டைக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்தது.
அந்த பேருந்தை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடா் விசாரணையில் உச்சிப்புளி அருகே உள்ள வெள்ளரி ஓடையைச் சோ்ந்த சுதாகா் (41) மற்றும் ராஜீவ்காந்தி (37) ஆகிய இருவரும், பேருந்து ஓட்டுநா் சதீஷ்குமாா் (36) என்பவரது உதவியுடன் அவற்றைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
எனவே அந்த 3 பேரையும் கைது செய்து, குட்கா பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், பேருந்தில் ராமேசுவரம் செல்லும் பயணிகள் இருந்ததால் காவலா்களின் உதவியுடன் அவா்களை ராமேசுவரத்தில் இறக்கி விட்ட பின்னா் பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளோம். இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என விசாரித்து வருகிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

மேற்கு கரையில் மசூதிகளுக்குத் தீவைப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



