கருவேல் மரங்களை அகற்றக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.
மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே இரண்டரை ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன.
இந்த கருவேல மரங்களை அகற்றக் கோரி பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய ஆறுமுகம், துணைத் தலைவா் மகாலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் உள்பட கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...