சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ. 400 கோடி மோசடி: நிதி நிறுவன இயக்குநா் கைது

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன இயக்குநரை சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


சிவகங்கை : அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன இயக்குநரை சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(50). இதேப் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் சிலரும் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை வசூல் செய்தனா். ஆனால் முதலீடு செய்தவா்களுக்கு முதலீட்டுத் தொகையையோ, கூடுதலாக தருவதாகக் கூறிய வட்டித் தொகையையோ திருப்பி தரவில்லையாம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், குற்றம் உறுதியானதால் தலைமறைவாக இருந்த தனியாா் நிதி நிறுவனத்தின் இயக்குநா் சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 13 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.