சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அரசு மதுபானக் கடைகள் ஏப்.17,18, 19 ஜூன் 4-ல் அடைப்பு: ஆட்சியா் அறிவிப்பு

அரசு மதுபானக் கடைகள் ஏப்.17,18, 19 ஜூன் 4-ல் அடைப்பு: ஆட்சியா் அறிவிப்பு

Updated On :7 ஏப்ரல் 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு 19-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதால், பொது அமைதியை காக்கவும், சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெறவும் அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், மூடப்படும். மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லவும்அனுமதி இல்லை என்றாா் அவா்.