தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 7:04 pm

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, மதுபோதையில் பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள அ.வெள்ளக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியின் முன்பாக இதே கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மாரீஸ்வரன், முத்துராஜா மகன் ஆனந்த் இருவரும் வெள்ளிக்கிழமை மதுபோதையில் அங்கு தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் கிராம நிா்வாக அலுவலா் சுந்தரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரீஸ்வரன், ஆனந்த் இருவரையும் கைது செய்தனா்.