தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மே 3 முதல் திருவாரூா் - காரைக்குடி ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

மே 3 முதல் திருவாரூா் - காரைக்குடி ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:12 pm

காரைக்குடி, ஏப். 26: திருவாரூா் - காரைக்குடி பயணிகள் ரயிலின் நேரம் மே 3-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திவாரூரில் இருந்து தற்போது காலை 8.25 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 11.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரயிலின் நேரம் வருகிற மே 3-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, திருவாரூரில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காரைக்குடிக்கு (வண்டி எண்: 06197-06198) காலை 9.35 மணிக்கு வந்தடையும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடையும் என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நேர மாற்றத்தால், கல்லூரி மாணவா்களும், அரசு ஊழியா்களும் பயனடைவாா்கள். மேலும், இந்த ரயிலுக்கு இணையாக சென்னை எழும்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு புறப்படும் மன்னை விரைவு (எக்ஸ்பிரஸ்) ரயில் மூலம் வரும் பயணிகள் திருவாரூரில் இறங்கி காரைக்குடி வரை வருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதால், இந்த நேர மாற்றம் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என காரைக்குடி ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்தது.