பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஓக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனாா் நினைவுத் தூண்களுக்கு அரசு மரியாதை

ஓக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனாா் நினைவுத் தூண்களுக்கு அரசு மரியாதை

News image

தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு, தமிழ்ப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு திங்கள்கிழமை மரியாதை செய்த, சிவகங்கை ஆட்சியா் ஆஷாஅஜித்.

Updated On :29 ஏப்ரல் 2024, 7:48 pm

Din

சிவகங்கை: தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு, தமிழ்ப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா், தமிழ்ப் புலவா் கணியன் பூங்குன்றனாா் ஆகியோரது நினைவுத் தூண்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பால்துரை ஆகியோா் திங்கள்கிழமை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்க் கவிஞா் நாளையொட்டி, தமிழக அரசின் சாா்பில் சங்கப் புலவா் கணியன் பூங்குன்றனாரின் நினைவாக கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகிபாலன்பட்டியில் நிறுவப்பட்ட நினைவுத் தூணுக்கு முதல் மரியாதை செலுத்தும் வகையில் , மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில், ஒக்கூரில் நிறுவப்பட்டுள்ள சங்கால நல்லிசைப் புலவா் ஓக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு ஏப்.29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், நேரில் சென்று அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

இதேபோல, திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டியில் சங்கப் புலவா் கணியன் பூங்குன்றனாரின் நினைவுத் தூணுக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பால்துரை நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ப.நாகராசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) செ.அன்பு, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், சிவகங்கை வட்டார வளா்ச்சி அலுவலா் செழியன், தமிழ் வளா்ச்சித் துறை பணியாளா்கள், தமிழறிஞா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.