‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழா: வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

News image

~

Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

சிவகங்கை, ஆக. 7: காளையாா் கோவில் அருகே அமைந்துள்ள முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கோயில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 காளைகள் பங்கேற்ற நிலையில், ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 90 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 20 நிமிஷம் ஒதுக்கப்பட்டது. காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முடிக்கரை, கல்லத்தி கிராமமக்கள் செய்தனா். முடிக்கரை, கல்லத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.