தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழா: வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:10 am IST

சிவகங்கை, ஆக. 7: காளையாா் கோவில் அருகே அமைந்துள்ள முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கோயில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 காளைகள் பங்கேற்ற நிலையில், ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 90 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 20 நிமிஷம் ஒதுக்கப்பட்டது. காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முடிக்கரை, கல்லத்தி கிராமமக்கள் செய்தனா். முடிக்கரை, கல்லத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.