சிவகங்கை, ஆக. 7: காளையாா் கோவில் அருகே அமைந்துள்ள முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கோயில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 காளைகள் பங்கேற்ற நிலையில், ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 90 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 20 நிமிஷம் ஒதுக்கப்பட்டது. காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முடிக்கரை, கல்லத்தி கிராமமக்கள் செய்தனா். முடிக்கரை, கல்லத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணக்குடியில் மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு
அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டு

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


