மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடி தவசு திருவிழாவில் சனிக்கிழமை இரவு யானை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த ஆனந்தவல்லி அம்மன்.
மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடி தவசு திருவிழாவில் சனிக்கிழமை இரவு யானை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த ஆனந்தவல்லி அம்மன்.

ஆடி தவசு விழா: யானை வாகனத்தில் ஆனந்தவல்லி பவனி

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா நடைபெற்று வருகிறது.
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தாா்.

இந்தக் கோயிலில் கடந்த 7-ம் தேதி ஆடி தவசு திருவிழா தொடங்கியது. விழாவின் நான்காம் நாள் மண்டகப்படியாக சிறிய யானை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

இதையடுத்து கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் பவனி வந்தாா். வீதிகளில் மக்கள் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com