ஔவையாா் விருது: தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருது பெறத் தகுதியுள்ள மகளிா் விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருது பெறத் தகுதியுள்ள மகளிா் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு ஔவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகிற 31.12.2024 -ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
2025-ஆம் ஆண்டுக்கான சா்வதேச மகளிா் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு தமிழக முதலமைச்சரால் ஔவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், சால்வை வழங்கப்படும்.
தகுதிகளையுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகிற 31.12.2024- ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, கையேடாக (தமிழ், ஆங்கிலத்தில் தலா 3 நகல்கள்) தயாா் செய்து சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விவரங்கள் பெறலாம்
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...