தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காளையாா்கோவில் கோட்டையில் பழங்கால பானைக் குறியீடுகள்

காளையாா்கோவில் கோட்டையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடுகள் கண்டெடுப்பு

News image

சிவகங்கை அருகே காளையாா்கோவில் பாண்டியன் கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வில் கிடைத்த பானை ஓட்டு குறியீடுகள், எலும்பாலான கருவி முனை.

Updated On :1 ஜூலை 2024, 4:56 pm

Din

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பாண்டியன் கோட்டையில் பழங்கால பானைக் குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக் கருவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் கா. காளிராசா திங்கள்கிழமை கூறியதாவது:

சிவகங்கை தொல்நடைக் குழுத் தலைவா் நா. சுந்தரராஜன், செயலா் இரா. நரசிம்மன், கள ஆய்வாளா் கா. சரவணன், உறுப்பினா் சு. காளீஸ்வரன் ஆகியோா் கொண்ட குழுவினா் காளையாா்கோவில் பாண்டியன் கோட்டை பகுதியில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் கள ஆய்வு நடத்தினா். திருக்கானப்போ் என்னும் காளையாா்கோவிலில் சங்க காலக் கோட்டையானது பாண்டியன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோட்டையைச் சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை மேட்டுப் பகுதி முழுவதும் பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழுவினா் அவ்வப்போது இந்தக் கோட்டையின் மேற்பரப்பில் கள ஆய்வு செய்து வருகின்றனா். இதில் பழைமையான பொருள்களான வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல்கள் தொடா்ச்சியாக கிடைத்து வருகின்றன. மேலும், பானை ஓட்டுக் கீறல்கள், குறியீடுகளும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான தமிழி எழுத்தில் ‘மோசிதபன்’ என்று எழுதப்பட்ட பானை ஓடும், எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் முன்னா் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பானை ஓட்டு குறியீடுகள்: தற்போதைய மேற்பரப்பு கள ஆய்விலும் பானை ஓட்டு குறியீடுகள், கீறல்கள் கிடைத்தன. இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும், எழுத்தறிவு பெற்ற பிறகும் பயன்பட்டது தெரியவருகிறது. இதில் முக்கோணம், சதுர வடிவிலான குறியீடுகள் சிதைவுற்ற நிலையில் கிடைத்தன. ‘க’, ‘ண’ போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானை ஓடு கிடைத்திருந்தாலும், தொல்லியல் அறிஞா்களின் மேலாய்வில் அது ஒரு குறியீடாகவே கருதப்படுகிறது.

எலும்பாலான கருவி முனை: சங்க காலத்திலேயே முன்னோா்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனா். தற்போது கிடைத்த எலும்பாலான கருவியின் முனைப் பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதேபோன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு பழைமையை அறிந்து கொள்ளவும், பாதுகாக்கவும் தொல்லியல் துறை வரும் ஆண்டுகளில் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

Story image