தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மக்கள் குறைதீா் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கையில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

News image

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை பயனாளிக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.

Updated On :1 ஜூலை 2024, 4:57 pm

Din

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்களிட மிருந்து 576 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கூட்டுறவுத்துறையில் ஒரு நபருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கியது உள்பட அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.31,03,989 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. மோகனச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.