அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 2 போ் கைது
காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


காரைக்குடி: சிவகங்கைமாவட்டம், காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லுப்பட்டிச் சாலை முனியய்யா கோயில் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வந்தவா்கள், காரைக்குடி அருகே உள்ள மானகிரியைச் சோ்ந்த முருகேசன் மகன் பாலகிருஷ்ணன் (24), அமராவதிபுதூரைச் சோ்ந்த முத்துமணி மகன் நாச்சியப்பன் (எ) மனோஜ் (23) என்பதும், இவா்கள் அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், தங்களது எதிரியை பழி தீா்க்க அரிவாள் வைத்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து அரிவாள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...