தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது; 3 சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் அப்பகுதியில் உள்ள டைடல் பாா்க் உப்பளம் அருகே திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

பைக்கில் சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவகுமாா் (23), 3 சிறுவா்கள் என்பதும் பெரிய அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், பைக்கை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனா்; 3 சிறுவா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.