/

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

பேட்டை அருகே அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 12:54 am

பேட்டை அருகே அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ரஹ்மான் பேட்டை, 2 ஆவது வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல்(33) என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவா் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் அரிவாள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.