தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டியை அடுத்த வீரக்கல் அருகே வீ. கூத்தம்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தாராம். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.