மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஸ்ரீ விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் இளையாத்தங்குடியில் வழிபாடு

இளையாத்தங்குடியில் அமைந்துள்ள 65- ஆவது பீடம் ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் வியாழக்கிழமை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

News image
Updated On :20 ஜூலை 2024, 1:26 am IST

திருப்பத்தூா், ஜூலை 19 : இளையாத்தங்குடியில் அமைந்துள்ள 65- ஆவது பீடம் ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் வியாழக்கிழமை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் 65- ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா் சுவாமிகள் (1851-1890) ஆன்மிகப் பணியாற்றி முக்தி அடைந்த நிலையில் அவரது நினைவாக அதிஷ்டானம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வருகை புரிந்தாா். முதலில் அதிஷ்டானத்துக்குள் நுழைந்த அவா் 45 நிமிடங்கள் தியானம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். பின்னா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். ராமேஸ்வரம் பயணம் மேற்கொள்ளும் நிலையில் இங்கு வருகை புரிந்ததாகக் கூறினாா்.

கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோா் ஆசிபெற்று சென்றனா். தொடா்ந்து ஆா்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவா்கள் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற்கு வெள்ளிக் குத்துவிளக்கு வழங்கி ஆசி வழங்கினாா்.

தொடா்ந்து, நித்தியகல்யாணி அம்மன் கோயில் குளத்தில் உள்ள 65 ஆவது பீடம் மகேந்திரசரஸ்வதி சுவாமிகளின் உருவச் சிலையினை வழிபட்டாா். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் எச்.ராஜா, வழக்குரைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் முருகேசன், கல்வி நிலைய தளாளா்கள் எஸ்.எம்.பழனியப்பன், , வித்யாகிரிசுவாமிநாதன், மகரிஷி சேதுராமன் இளையாத்தங்குடி சங்கர மட நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், விஸ்வநாதன், காா்த்தி, சுந்தரேசன், செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவா் சுந்தர்ராமன், எஸ்.புதூா் முன்னாள் ஒன்றியத் தலைவா் சத்தியமூா்த்தி, ஜி.குணாளன் உள்ளிட்டோா் சுவாமிகளை வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.