வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயம்

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நிற்கும் அரசுப் பேருந்து.

Updated On :28 ஜூலை 2024, 9:35 pm

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அரசு சொகுசுப் பேருந்து மதுரைக்குச் சென்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் அண்ணாத்துரை (52), நடத்துநா் லட்சுமணன், பயணிகள் திவ்யா (22), பொன்மதி (53), மோகநாயகி (36), குயின்பிரியங்கா (31) உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.