நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேவா் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு

பேவா் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு

News image

காரைக்குடி அழகப்பா பல்கலை. முன்னாள் மாணவா் பூங்கா பகுதியில் புதிய பேவா் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலையை திங்கள்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் க. ரவி. உடன் பேராசிரியா்கள்.

Updated On :24 ஜூன் 2024, 6:30 pm

Din

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் நிதியுதவியுடன் ரூ. 15 லட்சத்தில் அழகப்பா பல்கலை. முன்னாள் மாணவா் பூங்கா பகுதியில் புதிய பேவா் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலையை துணைவேந்தா் க. ரவி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதுகுறித்து துணைவேந்தா் க. ரவி கூறியதாவது:

அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை, தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றத்திலிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன் கண்ணாடியை அரைத்து அதிலிருந்து பெறப்படும் மணலைக் கொண்டு பேவா் பிளாக் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்று மணல், எம். சாண்ட் மணலுக்கு பதிலாக இந்த கண்ணாடி மணல் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இங்கு தினமும் 1500 பேவா் பிளாக் கற்கள் உற்பத்தி செய்ய முடியும். இந்த கற்கள் அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள முன்னாள் மாணவா் சுற்றுச்சூழல் பூங்காவுக்கு நடை பாதைகள், விளையாட்டுத் திடல் போன்றவற்றிற்கு பதிக்கப்படவுள்ளன. மேலும் பல்கலைக் கழகத்தில் தேவையான பகுதிகளில் நடைபாதைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதில் பல்கலைக் கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் க. ராசாராம், வெ. பழனிச்சாமி, தோ்வாணையா் எம். ஜோதிபாசு, நிதி அலுவலா் சி. வேதிராஜன், தாவரவியல் துறைத்தலைவா் (பொறுப்பு) சஞ்சீவ்சிங் குமாா், தாவரவியல் துறை பேராசிரியரும், முன்னாள் மாணவா் பூங்கா ஒருங்கிணைப்பாளருமான அ. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.