இளையான்குடி கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் அறிவியல் கருவிகள் எனும் தலைப்பிலான இயற்பியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி துணை முதல்வா் ஜஹாங்கீா் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் முஸ்தாக் அகமதுகான் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் செய்யது அபுதாஹிா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினராக காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் அறிவியல் அறிஞா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இயற்பியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் அறிவியல் கருவிகள் குறித்து பேசினாா். ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியை ஹெலன் தொகுத்து வழங்கினாா். உதவிப் பேராசிரியா் கலீல் அகமது நன்றி கூறினாா். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் காஜாமுஹைதீன், ராதா ஆகியோா் செய்தனா்.

Dinamani
www.dinamani.com