காரைக்குடி, மாா்ச் 12: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேஷனல் பயா் சேப்டி கல்லூரி, நேஷனல் கேட்டரிங் கல்லூரி, காவல் துறை காரைக்குடி உள்கோட்டம் ஆகியவற்றின் சாா்பில் 53-ஆவது தேசியப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சமூக நிா்வாகம் குறித்த தலைமைப் பண்பு’ என்ற தலைப்பிலான தேசியப் பாதுகாப்பு வாரத்தையொட்டி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை நேஷனல் கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ். சையது கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சேப்டி கல்லூரியில் இந்தப் பேரணி நிறைவடைந்தது. பின்னா், மாணவா்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி நடத் தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் எஸ். சையது தலைமைவகித்தாா்.
நேஷனல் கல்விக் குழும இயக்குநா் பி.எஸ். மனோகா், நிா்வாக இயக்குநா் எஸ்.எம். தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அருண்முரளி, பேரணி ஒருங்கிணைப்பாளா் ஏ. வினோத், நேஷனல் கல்விக் குழுமம் பிஆா்ஓ ஏ. ராஜூ, உதவிப் பேராசிரியா்கள் எம்ஆா். பாலசுப்பிரமணியன், ஏ. ஜோசப், ஆா். சரவணன் ஆகியோா் பேசினா். முன்னதாக நேஷனல் பயா் சேப்டி கல்லூரி முதல்வா் தனசீலன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜி. பிரசாந்த் நன்றி கூறினாா்.
தொடர்புடையது
தோ்தல் பறக்கும் படையினரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள்

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


