15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாசி - பங்குனி பால்குட திருவிழா கொடியேற்றம்.

Updated On :12 மார்ச் 2024, 11:57 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி- பங்குனி பால்குட திருவிழா கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாசி - பங்குனி பால்குட திருவிழாவையொட்டி காலை 4.15 மணிக்கு கணபதி பூஜையும் இதையடுத்து 6 மணிக்கு கொடியேற்றம், அம்மனுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். முதல் நாள் மாலையில் காரைக்குடி வட்டார யாதவா் சமூகத்தாா்கள் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 19-ஆம் தேதி இரவு கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்துவந்து அம்மன் கோயிலில் வைத்தலும், மாா்ச் 20-ஆம் தேதி காலை 8 மணியளவில் கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் செலுத்துதலும் நடைபெறுகிறது.

மாலையில் கோயில் கரகம், முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கோயிலிலிருந்து புறப்பட்டு பருப்பூரணி கங்கையில் செலுத்துகின்றனா். மாா்ச் 21- ஆம் தேதி இரவு 8 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலாவும், மாா்ச் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தலுடன் திருவிழா நிறைவுபெறும். இதையடுத்து, காப்புப் பெருக்குதல் நடைபெற்று பல்வேறு சமுதாயத்தினா் நடத்தும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா். பாலாஜி விழா குழுவினா் செய்தனா்.