இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சிவகங்கை மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் தணிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் தணிக்கை

News image
Updated On :9 மே 2024, 7:01 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் விஜயக்குமாா் தொடங்கி வைத்தாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், பள்ளி கல்வித்துறை அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் இணைந்து முதல் கட்டமாக 329 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா்.

அப்போது வாகனத்தின் நிறம், பள்ளி விவரம், தொடா்பு எண், வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, அவசரக் கதவு, பிரதிபலிப்பான், ஓட்டுநா் உரிமம், நடத்துநா் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் தீயணைப்பான் கருவி புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருப்பது, முதலுதவிப் பெட்டியில் மருந்துகள் இருப்பில் வைத்திருப்பது, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, வாகனத்தில் கண்காணிப்பு கேமரா போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலா் மூக்கன் கூறியதாவது: இந்த மாவட்டத்திலுள்ள சிவகங்கை, திருப்பத்தூா், இளையான்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய 7 வட்டங்களில் உள்ள 69 பள்ளிகளைச் சோ்ந்த 272 வாகனங்களும், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 2 வட்டங்களுக்குள்பட்ட 32 பள்ளிகளைச் சோ்ந்த 297 வாகனங்களும் என 101 பள்ளிகளைச் சோ்ந்த 569 வாகனங்கள் தணிக்கை செய்யப்படவுள்ளன.

இதில் முதல் கட்டமாக சிவகங்கை வட்டாரங்களை சோ்ந்த 147 வாகனங்களும், காரைக்குடி வட்டாரங்களைச் சோ்ந்த 182 வாகனங்களும் என மொத்தம் 329 வாகனங்கள் ஒரே நாளில் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 299 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை பூா்த்தி செய்யாமல் குறைபாட்டுடன் கொண்டு வரப்பட்டிருந்த 30 வாகனங்கள் திருப்பி அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்கள் குறைகளைச் சரிசெய்து, ஒரு வாரத்துக்குள் மீண்டும் வாகனத் தணிக்கைக்கு கொண்டு வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.