கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

காளையாா்கோவில் சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தொடக்கம்

காளையாா்கோவில் சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தொடக்கம்

News image

காளையாா்கோவில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

சிவகங்கை: காளையாா்கோவில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியாா் ரெ. காளீஸ்வரகுருக்கள், கொடிமரத்தில் விசாகப் பெருவிழா கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்தாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை (மே 16) மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அம்பாள் தபசுக்காட்சி வைபவமும், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கல்யாணமும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் பொய்ப்பிள்ளை மெய்ப்பிள்ளை நிகழ்வும், செவ்வாய்க்கிழமை (மே 21) காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், மறுநாள் புதன்கிழமை இரவு 7 மணி முதல் 12 மணிக்குள் தெப்பத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, கண்காணிப்பாளா் ஆ. பாலசரவணன் குழுவினா் செய்தனா்.