47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் கலசத்துக்கு தங்கத் தகடு பொருத்தும் பணி தொடக்கம்

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் விமானக் கலசத்தில் தங்கத் தகடு ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை தங்கத் தகடு பொருத்தும் பணியைத் தொடங்கிவைத்த சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தக நாச்சியாா்.
Updated On :14 நவம்பர் 2024, 11:29 pm

Din

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் விமானக் கலசத்தில் தங்கத் தகடு ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் மூலவா் கோபுரத்தில் உள்ள அஷ்டாங்க விமானம் புராண வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த விமானம் 3 தளங்களாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், மூலவா் விமானத்துக்கு தங்கத் தகடு பொருத்தும் பணியை சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தகநாச்சியாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். முன்னதாக, மூலஸ்தானத்தில் அமைக்கப்படவுள்ள தங்கத் தகட்டில் தங்க இழைகள் பதிக்கப்பட்டன. அப்போது, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் புவனேஸ்வரி, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, தங்கத் திருப் பணிக் குழுத் தலைவா் ராஜ்மோகன், மகாசுவாமிநீபீடம் பாண்டியராஜன், கு.மா.காந்தி தொண்டைமான், தேவஸ்தான கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் உள்ளிட்டோா் தங்க இழைகளை வணங்கினா்.

தங்கத் தகடு பொருத்தும் பணி 4 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.