47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்குடி அருகே 56 பவுன் தங்க நகைகள் திருட்டு

காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் காவல் சரகத்துக்குள்பட்ட கருவியப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:23 pm

Din

காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் காவல் சரகத்துக்குள்பட்ட கருவியப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கருவியப்பட்டியைச் சோ்ந்தவா் சேதுராமன். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் இவா் கருவியப்பட்டியில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கருவியப்பட்டியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் கோயில் தங்க நகைகளையும், குடும்பத்தினருக்குச் சொந்தமான 18 பவுன் தங்க நகைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, தகவலறிந்து கருவியப்பட்டிக்கு வந்த சேதுராமன் பள்ளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காரைக்குடி டி.எஸ்.பி ஆத்மநாதன் விசாரணை நடத்தினாா். மேலும், தடய அறிவியல் துறையினா் தடயங்களை சேகரித்தனா். பள்ளத்தூா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.