தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு

Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை ஏ.கே.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (50). இவா் தனது மகள் பிரசவத்துக்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகைகள், ரூ. 20,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.