எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயற்சி

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்குள் வியாழக்கிழமை சிலா் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயன்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:02 am

Din

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்குள் வியாழக்கிழமை சிலா் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயன்றனா்.

சிவகங்கை-மேலூா் சாலையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு, தனியாா் ஆசிரியா் பயிற்சி பள்ளியில் பயின்ற சுமாா் 30 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி ஆசிரியா்களில் ஒருவரது பெண் குழந்தைகள் இருவா் இந்தப் பள்ளியில் பயின்று வந்தனா். கடந்த மாதம் இந்த மாணவிகள் இருவரும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறி வகுப்பு ஆசிரியை அபராதம் விதித்தாராம். அபராதத் தொகையை பயிற்சி ஆசிரியை கட்ட மறுத்ததுடன், தனது இரு குழந்தைகளையும் வேறு பள்ளியில் சோ்த்தாா்.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியா்கள், பயிற்சி ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் வியாழக்கிழமை அறிவுரை கூறினாா். அப்போது, பள்ளி ஆசிரியா் தன்னை மையமாக வைத்துப் பேசியதாக புரிந்து கொண்ட பயிற்சி ஆசிரியா் தனது உறவினா்களை பள்ளிக்கு அழைத்தாராம்.

அங்கு வந்த ஐந்து போ் தலைமை ஆசிரியரின் அறைக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியா்களைத் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த சக ஆசிரியைகள் தடுத்ததுடன், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து புகாரளிக்குமாறு கூறிவிட்டு காவல் துறையினா் சென்றுவிட்டனா்.

தகவறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, தலைமை ஆசிரியா், ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினாா்.