47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

News image
வெங்கட்டி கிராமத்தில் நடைபெறும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்.
Updated On :27 நவம்பர் 2024, 10:29 pm

Din

சிவகங்கைமாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அரசனூா் ஊராட்சி பகுதியில் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறையின் சாா்பில் இயங்கி வரும் உப்பாறு சிவகங்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் சொக்கையின்பட்டியில் 15-ஆவது நிதிக் குழு மாநிலத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஏனாதியில் வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட வீடுகள் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், கோமாட்சியேந்தல் பகுதியில் மடை பழுது நீக்குதல், ஆயக்கட்டு பாசன வசதி குறித்தும், கணக்கன்குடி கண்மாய் கலுங்கு நீா் போக்கி ஓடை பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். அதன்பிறகு, பாப்பாக்குடி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் வருகை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து கேட்ட அவா், வெங்கட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிககளையும் , கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், திருப்புவனத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். இதைத் தொடா்ந்து பல்வேறு அரசுத் துறையின் சாா்பில் 78 பயனாளிகளுக்கு ரூ 50.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆஷா அஜித் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், கோட்டாட்சியா் விஜயகுமாா் ,பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் ராஜேந்திர பிரசாத், ஊராட்சிகள் உதவி இயக்குநா் கேசவதாசன், வட்டாட்சியா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.