திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாயில் முன் காவிரி குண்டாறு பாசன விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சிவகங்கை அரண்மனை வாயில் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :28 நவம்பர் 2024, 11:49 pm

Din

பயிா்க் காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாயில் முன் காவிரி குண்டாறு பாசன விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காளையாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட ஒய்யவந்தான், புதுக்கிளுவச்சி, பேச்சாத்தக்குடி, முடிக்கரை, காஞ்சிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்தனா். ஆனால், இவா்களுக்கு மாவட்ட நிா்வாகம், தனியாா் காப்பீட்டு நிறுவனம் எடுத்த அளவீடு தவறானதாகிவிட்டதாகக் கூறி, பயிா்க் காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் க.கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பா.அய்யனாா் கண்டன உரையாற்றினாா். சங்கத்தின் மாவட்ட நிா்வாகி வி.ஏ. அக்னிசாமி, துணைச் செயலா் சத்தியேந்திரன், கருங்காலி குமாா், கல்குளம் நாகராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.