ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் காளை இறப்பு : கிராம மக்கள் அஞ்சலி

சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
சிங்கம்புணரி அருகே முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.
Updated On :2 அக்டோபர் 2024, 6:35 pm

Din

சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியண்ணன் சுவாமி கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கோயில் காளை வாங்கி வளா்க்கப்பட்டு வந்தது.

இந்தக் காளை பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளை பெற்றுதந்தது. இந்த நிலையில், வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை இது உயிரிழந்தது. இந்தக் காளையை முருக்கபட்டி, சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வேஷ்டி, துண்டு மாலைகள் அணிவித்து, வழிபட்டு இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா் திடலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, வாணவேடிக்கைகளுடன் ஊா்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனா்.