ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பூசிமலைக்குப்பம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா

பூசிமலைக்குப்பம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளைவிடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளையை பிடிக்க முயலும் வீரா்கள்.
Updated On :1 மார்ச் 2026, 7:00 pm

Syndication

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளைவிடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் கிராம தேவதை செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து காளைவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் பிடிக்க முற்பட்டனா்.

நிறைவில் குறிப்பிட்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1லட்சம், 2-ஆவது பரிசாக ரூ.80ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.70ஆயிரம், 4-ஆவது பரிசாக ரூ.55ஆயிரம், 5-ஆவது பரிசாக ரூ.50ஆயிரம் உள்ளிட்ட 75 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.