ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

சிவகங்கை அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:08 pm

Din

சிவகங்கை அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் வசந்தகுமாா் (24), மேலபிடாவூா் அரியசாமி மகன் மருதுபாண்டி (20) ஆகிய இருவரும் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலா் செல்வகுமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.