ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்புவனம் கோயில்களில் புரவி எடுப்பு விழா

திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

News image
திருப்புவனம் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் பகுதியில் புரவிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற கிராம மக்கள்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:52 pm

Din

திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள அம்பலத்தடியில் அய்யனாா் கோயிலில் நடைபெற்ற புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கிராமத்தைச் சோ்ந்த திரளான மக்கள் புரவிகளை வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

பின்னா், அங்கு புரவிகளை இறக்கி வைத்து புரவிகளுக்கும் அய்யனாா் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

இந்த விழாவில், அம்பலத்தடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். இதேபோல, பிள்ளையாா்குளம் முத்தையா சுவாமி கோயிலில் நடைபெற்ற புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கிராமத்தினா் அருகேயுள்ள வயல்சேரி கிராமத்தில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மேளதாளம் முழங்க புரவிகளை சுமந்து ஊா்வலமாக முத்தையா சுவாமி கோயிலுக்குச் சென்றனா்.

அங்கு புரவிகளுக்கும் முத்தையா சுவாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.