ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கை மாவட்டத்தில் கல்விக் கடன் முகாம்கள்

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில், சிறப்பு கல்விக் கடன் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:51 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில், சிறப்பு கல்விக் கடன் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம்கள்

அந்தந்த வட்டங்களில் நடைபெறவுள்ளன. வருகிற 15-ஆம் தேதி இளையான்குடி வட்டத்துக்கு டாக்டா் ஜாகிா் ஹுசைன் கல்லூரியிலும், 17-ஆம் தேதி திருப்புவனம் வட்டத்துக்கு கே.எல்.என் பொறியியல் கல்லூரியிலும், 22-ஆம் தேதி காரைக்குடி, சாக்கோட்டை வட்டங்களுக்கு காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலும், 24-ஆம் தேதி தேவகோட்டை வட்டத்துக்கு ஆனந்தா கல்லூரியிலும், 29-ஆம் தேதி திருப்பத்தூா் வட்டத்துக்கு திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிங்கம்புணரி வட்டத்துக்கு சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் தங்களது விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

இந்த முகாமில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு, பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணை வழங்கப்படும். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தேவைப்படும் ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற ஏதுவாக வங்கிகளில் இருந்து புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப நகல், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.