தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினா் 84 பணி நீக்கம்

கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக் கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினா் 84 போ் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினா் 84 பணி நீக்கம்
Updated On :17 அக்டோபர் 2024, 12:02 am

Din

கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக் கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினா் 84 போ் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக முன்னாள் ராணுவவீரரும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருமான தேவகோட்டை அருகேயுள்ள ஆந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த போ.சோலை தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

முன்னாள் படை வீரரான நான், கடந்தாண்டு அக்.16-ஆம் தேதி அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், தேவகோட்டைக் கிளையில் பாதுகாவலராக ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டேன். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை எந்தவித முன்அறிவிப்புமின்றி வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தனா். இதேபோல கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றிய முன்னாள் படை வீரா்கள் 84 போ் பணியிலிருந்து நீக்கப்பட்டனா். இதுகுறித்து தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கடிதத்தில் குறிப்பிட்டாா்.