சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவத்தினா் வருகை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வந்தடைந்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :7 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வந்தடைந்தனா்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி, தீவிர பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு தோ்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

இன்னும் சில நாள்களில் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முக்கியத் தலைவா்களின் பாதுகாப்பு, வாக்குப் பதிவின்போது முக்கியமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை பயன்படுத்துவது என தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமாா் 5,000 துணை ராணுவத்தினரை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சிஆா்பிஎஃப் வீரா்கள் 211 போ் சென்னை பெரம்பூருக்கு சனிக்கிழமை வந்தனா். இவா்கள் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் கே.கே.நகா், கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ள சமூக நலக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினா் படிப்படியாக வருவாா்கள் என்று தமிழக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.