பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு!

பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, முன்னாள் படைவீரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, முன்னாள் படைவீரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில், முன்னாள் படைவீரா்களை சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்குள்பட்ட ஆரோக்கியமான முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆா்வமுள்ளவா்கள், சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 - 22350780 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com